வெள்ளி, 5 செப்டம்பர், 2008

முதன் முதலாக

அன்றுதான் அவளைச் சந்தித்தேன்
முதல் சந்திப்பிலேயே அவள் புன்னகைத்தாள்

அழகான முகம்
அடர்த்தியான கேசம்
நட்சத்திரம் மின்னும் கண்கள்
ஆப்பிள் போன்ற கன்னங்கள்

புன்னகையில் பூத்த மலர்களாய்
கன்னத்தில் விழும் குழிகள்

அவள் கைவிரல் தனை நீட்டி
அழகாய் எனை அருகில் அழைத்தாள்

அவளை மார்போடு அணைத்து
உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டு
உரக்க அவள் காதில் சொன்னேன்


இனியும் உன்னை பிரிய மாட்டேன்

என் அன்பு "மகளே"


கருத்துகள் இல்லை: