புதன், 3 செப்டம்பர், 2008

வருக ஆதரவு தருக

வணக்கம்

நான் சிவா , எனது சொந்த ஊர் வற்றாத நதி தாமிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலி ஆகும்.

எங்கள் ஊர் அல்வாவுக்கு மட்டும் அல்ல , காந்திமதி அம்பாள் கோயிலுக்கும், வற்றாத ஜீவநதி போன்று வற்றாத அன்புக்கும், பெயர் பெற்ற ஊர்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான், இப்பொழுது வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் சென்னையில் வேலை செய்கிறேன்.

எனக்கு சிறு வயதில் இருந்தே தமிழில் ஆர்வம் அதிகம். ஆகையால் நான் எனது எண்ணச்சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன். அதற்கு உங்கள் ஆதரவினை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.

நன்றி

இவண்,
நெல்லை ஆசி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Maarrangal seithathurku mikka nandri. Vaazhga valamudan .